தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகச் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயிலுக்குத் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.